பல பெயர்களில், பல உருவங்களில், பல இயக்கங்களுடன் தொடர்புகள் வைத்து வன்முறை, கொலை-கொள்ளை என்று தீவிரவாதத்தை வளர்ந்து வரும் மாவோயிஸ்டுகள்!
2008ல் கொடைக்கானலில் நவீன்பிரசாத் சுட்டுக் கொல்லப்படல்[1]: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைவாழ் மக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்த வழக்கில், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் மாவோயிஸ்ட்டிடம் 2 நாள்கள் விசாரணை நடத்த திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது. கடந்த 2008 ஆம் ஆண்டு, கொடைக்கானல் மலைப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்கான பணியில், நவீன்பிரசாத் உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்டுகள் ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த க்யூ பிரிவு போலீஸார் அங்கு சென்ற போது, இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், நவீன்பிரசாத் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் இருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். 7 ஆண்டுகளுக்குப் பின், தப்பி ஓடியவர்களில் கண்ணன் என்ற செந்தில் என்ற குமார் என்ற மின்னல் (46), அ.நீலமேகம் என்ற கதிர் என்ற விநாயக் (30) ஆகியோர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர்[2].
தே.பா. சட்டத்தில் கைதான மாவோயிஸ்டுகள் 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன் (ஜனவரி 2016): கோவையை அடுத்த கருமத்தம்பட்டி-அன்னூர் சாலையில் உள்ள ஒரு பேக்கரியில் வைத்து, கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மல்லபள்ளியை சேர்ந்த ரூபேஷ் (43), அவருடைய மனைவி சைனா (37), திருச்சூரை சேர்ந்த அனூப் (40), மதுரையை சேர்ந்த கார்த்தி என்ற கண்ணன் (39), கடலூரை சேர்ந்த ஈஸ்வரன் என்ற வீரமணி (42) ஆகியோரை, கடந்த ஆண்டு 2015 மே 4ம் தேதி காவல்துறையினர் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்[3]. இந்த நிலையில், மாவோயிஸ்டுகள் 5 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கியூ பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இது தொடர்பாக கியூ பிரிவு காவல்துணை துணை கண்காணிப்பாளர் சேதுபதி அளித்த பரிந்துரையை ஏற்று மாவட்ட கலெக்டர், மாவோயிஸ்டுகள் 5 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதனால், அவர்கள் ஒரு ஆண்டுக்கு ஜாமீனில் வர முடியாத நிலை ஏற்பட்டது.இந்த நிலையில், மாவோயிஸ்டுகள் 5 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியதோடு, கியூ பிரிவு காவல்துறையினர் முன் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டது[4].
24-07-2016 ஞாயிறன்று கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் மகாலிங்கம்: ஜாமீனில் வெளிவந்து தலைமறை வான மாவோயிஸ்ட் மகாலிங்கம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளத்தில் 24-07-2016 ஞாயிறன்று கைது செய்யப்பட்டார்[5]. 25-07-2016 திங்கட்கிழமையன்று காலை, ஆண்டிபட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் பாஸ்கரன் வீட்டுக்கு அழைத்துச் சென்று ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை மகாலிங்கத்தை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மதுரை மத்திய சிறையில் மகாலிங்கம் அடைக்கப்பட்டார்[6]. சேலத்தில் மாவோயிஸ்டுகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் க்யூ பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம், வருசநாடு வனப்பகுதியில் பதுங்கியிருந்து ஆயுதப் பயிற்சி எடுத்த மாவோயிஸ்ட்களான மகாலிங்கம்,62. முருகானந்தம், மருது, லோகேஷ், பாலமுருகன் ஆகிய 5 பேரை, கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி தேனி கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்கள் ஆண்டிபட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் ஜாமீன் பெற்று தலைமறைவானார். இவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஆண்டிபட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. மகாலிங்கத்தை தேடும் பணியில் கியூ பிரிவு போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.
எருமையூரில் பிடிபட்ட மாவோயிஸ்ட் ரீட்டா ஜாய்ஸ் மேரி (செப்டம்பர் 2016)[7]: கைது செய்யப்பட்ட இரண்டு பெண் மாவோயிஸ்டுகளில் ஒருவரான சந்திராவை வரும் அக்டோபர் 10-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கரூரில் சந்திரா, கலா என்ற பெண் மாவோயிஸ்ட்களை போலீஸார் கடந்த சில தினங்களுக்கு முன்பு செப்டம்பர் 10/11 தேதிகளில் கைது செய்தனர்[8]. அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டம் எருமையூரில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து அங்கு வீட்டில் தங்கியிருந்து கல்குவாரில் ஒன்றில் வேலை செய்து வந்த பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர் தப்பியோடிவந்த மாவோயிஸ்ட் ரீட்டா ஜாய்ஸ் மேரி (42) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து க்யூ பிரிவு போலீஸார், அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் அவ்வப்போது கேரளம், கர்நாடக மாநிலங்களின் மலைப் பகுதிக்கு சென்று, அங்கு பதுங்கியிருக்கும் மாவோயிஸ்ட் இயக்கத்தினரை சந்தித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதில் ரீட்டா ஜாய்ஸ் மேரி, மதுரையைச் சேர்ந்தவர். சந்திரா, கலா ஆகியோர் கரூரைச் சேர்ந்தவர்கள்.
ஆள்கொணர்வு மனுவை நிராகரித்து, தள்ளுபடி செய்தது (அக்டோபர் 2016): சென்னை உயர்நீதி மன்றம் ரூபேஷ் சார்பில் தொடுக்கப்பட்ட ஆள்கொணர்வு மனுவை நிராகரித்து, கீழ்கண்ட மாவோயிஸ்டுகளை அரசு பிடித்து வைத்திருப்பதை உறுதி செய்தது[9]:
- ஆர். ரூபேஷ் / பிரஷாந்த் / பிரவீன் / பிரகாஷ் / ரூபின் / கரியன் [ Roopesh alias Prasanth alias Praveen alias Prakash alias Ruban alias Kariyan (45)].
- சைனா / சைனி / ஷோபா / ராஜி [Shyna alias Shyni alias Shoba alias Rajee (42)].
- எஸ். கண்ணன் / செந்தில் / குமார் / மின்னல் [ Kannan alias Senthil alias Kumar alias Minnal (46)],
- சி. வீரமணி / நடராஜ் / சுனில்குமார் / சாரா / ஈஸ்வர் / வஜ்ரமணி / ரிஸ்வான் [ Veeramani alias Natraj alias Sunilkumar alias Sara alias Eswar alias Vajramani alias Riswan (60)].
- அனுப் மாத்யூ ஜார்ஜ் [Anup Mathew George (32)].
இவர்களது இயக்கம் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டுள்ளவற்றைத் தடுக்கும் சட்டப் பிரிவின் [under Section 35(1) of the Unlawful Activities (Prevention) Act, 1967] கீழ் தடை செய்யப்பட்டிருப்பதாலும், இவர்களும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாலும், அது அவசியமாகிறது என்று ஆள்கொணர்வு மனுவை நிராகரித்து, தள்ளுபடி செய்தது[10].
© வேதபிரகாஷ்
04-10-2016
[1] தினமணி, பெண் மாவோயிஸ்ட் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்: 2 நாள்கள் விசாரணை நடத்த போலீஸாருக்கு அனுமதி, By திண்டுக்கல், First Published : 27 August 2016 12:26 AM IST
[2]http://www.dinamani.com/edition_madurai/dindigul/2016/08/27/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2/article3598668.ece
[3] விகடன், தே.பா. சட்டத்தில் கைதான மாவோயிஸ்டுகள் 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன்!, Posted Date : 16:10 (21/01/2016); Last updated : 17:56 (21/01/2016).
[4] http://www.vikatan.com/news/tamilnadu/57942-five-maoists-conditional-bail-madras-high-court.art
[5] தமிழ்.ஒன்.இந்தியா, கேரளாவில் கைதான மாவோயிஸ்ட் மகாலிங்கம்: சேலம், தர்மபுரியில் மாவோயிஸ்ட்டுகள் தேடுதல் வேட்டை, By: Mayura Akilan, Published: Tuesday, July 26, 2016, 18:16 [IST].
[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/suspected-maoist-judicial-custody-258871.html
[7] தமிழ்.ஒன்.இந்தியா, கரூரில் சிக்கிய பெண் மாவேயிஸ்ட்டுக்கு காவல் நீட்டிப்பு.. திருச்சி சிறையிலடைப்பு!, By: Essaki, Updated: Wednesday, September 14, 2016, 20:08 [IST].
[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/karur-court-custody-extension-maoists-chandra-262792.html
[9] The Hindu, HC confirms detention of 5 suspected Maoists under NSA, MADURAI, October 4, 2016; Updated: October 4, 2016 07:47 IST
[10] http://www.thehindu.com/news/cities/Madurai/hc-confirms-detention-of-5-suspected-maoists-under-nsa/article9180855.ece