நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் – லாபம் என்ன – பங்குகள், பங்குதாரர்கள் என திடீரென்று பிரச்சினை வந்துள்ளது ஏன்? (1)
பல ஆண்டுகளாக புதிராக காணப்படும் என்.சி.பி.எச்: 1980களிலிருந்து நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கட்டிடத்தை [New Century Book House ] வருவாய் துறையினர், குறிப்பாக மதித்திய கலால், சுங்கம், ஜிஎஸ்டி போன்றவை கவனித்து வருகின்றனர். நம்பர்.1, சிட்கோ இன்டெஸ்டிரியல் எஸ்டேட் என்று அங்கு தான் ஆரம்பிக்க வேண்டும். சர்வே எடுப்பவர்கள் அங்கு சென்றாலும், ஏதோ மழுப்பி அனுப்பி விடுவர். பொதுவாக, ஏதாவது பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் தான், அந்த இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில், பேக்டரி ஷெட்டைப் பெற முடியும், ஆக, அவ்வாறு சொல்லித் தான் இடம் ஒதுக்கீட்டு முறையில் வாங்கியிருக்கிறார்கள். இன்று அதன் மதிப்பு கோடிகளில், அதிலும், ஐடி அல்லது இம்.என்.சி கம்பெனிகள் தயாராக இருக்கின்றன. அப்பொழுது இருந்த இந்தியா போர்ஜ், போன்ற கம்பெனிகள் எல்லாம் மறைந்து விட்டன. ஆனால், என்.சி.பி.எச் உள்ளது. இபொழுது திடீரென்று ஷேர், சொத்து, பங்கீடு என்றெல்லாம் செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. கம்யூனிஸம் பேசும் இந்த முதலாளிகள் இப்பொழுது கோடீஸ்வரர்கள் தாம். அவர்களில் சிலர், ஏதோ சாதாரண ஆட்கள் போன்று சட்டை-வேட்டி கட்டிக் கொண்டு காணப்படலாம், ஆனால், உண்மையில் பெரிய கோடீஸ்வரர்கள் தான்.
என்.சி.பி.எச் பெரும்பான்மைப் பங்குகளை யார் வைத்திருப்பது.?: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புத்தக நிறுவனமான நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் [New Century Book House P Ltd.,] பெரும்பான்மைப் பங்குகளை யார் வைத்திருப்பது என்பது குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது[1]. ஆனால், புத்தக நிறுவனம் கட்சிக்கு கட்டுப்பட்டதல்ல என்கிறார்கள் நிர்வாகத்தினர்[2]. இந்த விவகாரத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது? இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பதிப்பகப் பிரிவாக அறியப்படும் நிறுவனம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். சென்னையில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனத்திற்கு தமிழ்நாடு முழுவதும் 20 கிளைகள் உள்ளன. இதன் துணை நிறுவனமாக பாவை பிரிண்டர்ஸ் செயல்படுகிறது. ஆயிரக்கணக்கான புத்தகங்களை இந்த நிறுவனம் இதுவரை வெளியிட்டிருக்கிறது. தற்போது இந்த நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை யார் வைத்திருப்பது என்பது தொடர்பாகவும் யார் அதனைக் கட்டுப்படுத்துவது என்பது குறித்தும்தான் பிரச்சனை எழுந்துள்ளது. அரசியல் கட்சிகள் பதிப்பகங்களை நடத்தும்போது, அந்தக் கட்சியின் ஒரு பிரிவாகவே அந்தப் பதிப்பகம் நடத்தப்படும். அல்லது கட்சித் தலைவர்களை அறங்காவலர்களாகக் கொண்ட அறக்கட்டளைகள் மூலம் அந்த பதிப்பகம் நடத்தப்படும்.
1951ல் ஆரம்பிக்கப் பட்ட என்.சி.பி.எச்: ஏழைத் தொழிலாளிகள் மற்றும் கூலி விவசாயிகளின் கட்சியாக அன்று அறியப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையாக வந்து கொண்டிருந்த ஜனசக்தியின் கிளை நிறுவனமாக முதலில் ஜனசக்தி பிரசுராலயம் என்றும் ஆங்கிலத்தில் பீப்பிள் புக் ஹவுஸ் என்ற பெயரிலும் 1951 வாக்கில் உருவானது. இதற்கு கட்சி தான் முதலீடு செய்து வி.சீனிவாசராவ், ஜீவா, மணலி கந்தசாமி, எம்.ஆர்.வெங்கட்ராமன், வி.பிசிந்தன் போன்றோரை பங்குதார்களாக அறிவித்தது. சில ஆண்டுகளில் சோவியத் யூனியன் உதவி செய்ய முன் வந்தது[3]. எனவே, அந்த உதவியை ஒரு கட்சிக்கு செய்ய முடியாது என்பதால் பிரைவேட் லிமிடெட் ஆக மாற்றப்பட்டது! இதன் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர்கள் யாவருமே கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டனர். எம்.வி.சுந்தரம், மோகன் குமாரமங்களம், பாலதண்டாயுதம், பா.மாணிக்கம், ராதாகிருஷண மூர்த்தி.. போன்ற பலர் இதன் பொறுப்பில் மகத்தான பங்களிப்பு தந்துள்ளனர்[4]. ஊழியர்களுமே கட்சி குடும்பத்து பிள்ளைகள் தாம்!
என்.சி.பி.எச் மற்ற பதிப்பகத்தாருடன் ஒப்பீடு செய்யப் படுவது: இன்றைக்கும் பதிப்பகத் துறையில் கோலோச்சும் ஆர்.எஸ்.சண்முகத்தின் செண்பகா பதிப்பகம், லட்சுமணனின் ஏகம் பதிப்பகம், என்.கே.கிருஷ்ணமூர்த்தியின் ராஜ்குமார் பப்ளிகேஷன்ஸ், ஜெயக்குமாரின் அருணா பப்ளிகேஷன்ஸ், ஆவுடையப்பனின் ஏ.எம்.புக் ஹவுஸ்..போன்ற பத்துக்கு மேற்பட்ட பதிப்பகங்கள் என்.சி.பிஹெச்சில் உழைத்து, களைத்து வெளியேறியவர்களால் ஆரம்பிக்கப்பட்டவையே! இது ஒரு வகையில் தனிப்பட்டவர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு, திறமை இவற்றை அங்கீகரித்து பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை தரத் தவறியதன் விளைவாகவும் எடுத்துக் கொள்ளலாம். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், ஒரு நிறுவனத்தின் உழைப்புக்கு அடிநாதமாக உள்ள உழைப்பாளிகளுக்கு அதன் லாபத்தில் உரிய பங்கை தராமல் அலட்சியப்படுத்தியதன் விளைவு என்றும் சொல்லலாம்.
சண்முகம் சரவணன் என்பவரிடம் அதிக பங்குகள் இருப்பதால் ஆரம்பித்தப் பிரச்சினை: திராவிடர் கழகத்தின் விடுதலை நாளிதழ், தி.மு.கவின் முரசொலி, சி.பி.எம்மின் பாரதி புத்தகாலயம் ஆகியவை இந்த பாணியிலேயே நடத்தப்படுகின்றன. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பதிப்பகமான நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் எனப்படும் என்சிபிஎச், துவங்கும்போதே ஒரு பிரைவேட் லிமிட்டெட் நிறுவனமாகத் துவங்கப்பட்டது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிட்டெட் என்ற இந்த நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகள், தற்போது அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ள சண்முக சரவணன் வசம் உள்ளன [Shanmukha Saravanan, who is currently the managing director ]. ஆனால், தனி நபர் ஒருவரிடம் பெரும்பான்மைப் பங்குகள் இருப்பதை விரும்பாத கட்சி அமைப்பு, அந்தப் பங்குகளை கட்சி நிர்வாகிகளுக்கு மாற்றித் தரச் சொல்லிக் கேட்கிறது. அதற்கு சண்முக சரவணன் மறுக்கவே விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனமான நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (என்.சி.பி.ஹெச்) நிறுவனம் யாருக்குச் சொந்தம் என்பதில் கட்சிக்கும், என்.சி.பி.ஹெச் நிர்வாக இயக்குநர் சண்முகம் சரவணன் தரப்புக்கும் இடையே பிரச்னை வெடித்திருக்கிறது[5]. ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரே, அந்தக் கட்சியின் பதிப்பக நிர்வாக இயக்குநரிடமிருந்து பங்குகளை எழுதிக் கேட்டு மிரட்டுவதாகவும், இதனால் நிர்வாக இயக்குநர் சண்முகம் சரவணன் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார்’ என்றும் தகவல்கள் சிறகடிக்கின்றன[6].
வருட நிகர விற்றுமுதல் வருமானம் ரூ 20 கோடிகள்: இப்பொழுது ரூ 20 கோடிகளுக்கு வருட வருமானம் [20 crore rupees annual turnover] வருகிறது. தற்போது பல பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் தேவையான புத்தகங்களை அச்சிடுவது, வெளியிடுவது என ஆண்டுதோறும் 20 கோடி ரூபாய் அளவுக்கு விற்றுமுதல் செய்கிறது இந்த நிறுவனம். அப்படியென்றால் நிச்சயமாக அதில் கணிசமான லாபம் கோடிகளில் உள்ளது. அதனால், நிச்சயமாக அதை பங்குப் போட்டுக் கொள்வதில் பிரச்சினை வரத்தான் செய்யும். இதில் மார்க்ஸ்-லெனின், பொதுவுடமை எல்லாம் வராது. காசு, பணம், துட்டு, அதிலும் சொத்து-லாபம் எனும் பொழுது, முதலாளிகள் தான், பங்கீடு தான்! பிறகு ஏன் ஓய்வு பெற்று வீடுகளுக்கு செல்லப் போகின்றனர். இருக்கும் வரை இயக்குனர்களாக இருந்து அனுபவிக்கத்தான் செய்வர். அதில் தான் போட்டி, பங்கீடு போட்டி என்பதனை அறிந்து கொள்லலாம்.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வாசகர் வட்டம் உறுப்பினர் பணம் என்னவயிற்று?: 1970களில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வாசகர் வட்டம் என்று ஆயுள் உறுப்பினராக ரூ.100/- வசூலித்து அடையாள அட்டையும் கொடுத்தனர். லட்சக்கணக்கில் உறுப்பினர்கள் இருந்தனர். மவுண்ட் ரோட் ஆபிசில் மாதாந்திர கூட்டம் எல்லாம் நடக்கும். ஆக ஒரு லட்சம் உறுப்பினர் என்றாலே ரூ 100 x 1,00,000 = 1,00,00,000/- ஒரு கோடி வருகிறது. இன்றைய மதிப்பு ரூ.10 கோடி. அதாவது, உறுப்பினர்களுக்கு எதாவது கொடுக்க வேண்டும். ஆனால், இன்றைக்கு அது என்னவாயிற்று என்றே தெரியவில்லை. அந்த பணத்தையும் இவர்கள் தான் அனுபவித்து வருகிறார்கள் என்று தெரிகிறது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் [New Century Book House P Ltd.,] என்பதால், அத்தகைய பணத்திற்கு கணக்குக் காட்டியாக வேண்டும். என்ன செய்தார்கள் என்று மார்க்ஸ், லெனின் முதலியோரிடம் கேட்க முடியாது. இப்பொழுதிருக்கும் டைரக்டர்களிடம் தான் கேட்க வேண்டும். என்ன சொல்லப் போகிறர்கள்?
© வேதபிரகாஷ்
27-05-2023
[1] பிபிசி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நியூ செஞ்சுரி புக் ஹவுஸுக்கு , ‘உரிமையாளர்‘ யார்? என்ன பிரச்னை?, முரளிதரன் காசிவிஸ்வநாதன், பதவி, பிபிசி, தமிழ், 23 மே 2023
[2] https://www.bbc.com/tamil/articles/c981r7509npo
[3] அறம், எப்படி கபளீகரம் செய்யப்பட்டது என்.சி.பி.ஹெச்?, சாவித்திரி கண்ணன், May 19, 2023.
[4] https://aramonline.in/13602/ncbh-looting-by-sanmugam-saravanan/
[5] ஜூனியர் விகடன், சொத்துக்காக மிரட்டுகிறார்! – கட்சி நிறுவனத்தை அபகரிக்க நினைக்கிறார்!, ஜூனியர் விகடன் டீம், Published:20 May 2023 5 AMUpdated:20 May 2023 5 AM
[6] https://www.vikatan.com/government-and-politics/politics/new-century-book-house-cpi