பணக்கட்டுகளை மெத்தையில் போட்டு படுத்து, சுகித்த மார்க்ஸ்சிஸ்ட் சிந்தாந்தி, கம்யூனிஸ்ட் வேதாந்தி, பொதுவுடமை சூத்ரதாரி!

பணக்கட்டுகளை மெத்தையில் போட்டு படுத்து, சுகித்த மார்க்ஸ்சிஸ்ட் சிந்தாந்தி, கம்யூனிஸ்ட் வேதாந்தி, பொதுவுடமை சூத்ரதாரி!

1000 Currency Bed CPM way

பணத்தின் மீது படுத்த பொதுவுடமை சிந்தாந்தி: கம்யூனிஸ்டுகளைப் போன்ற பொய்யர்களை உலகத்தில் எங்கும் பார்க்க முடியாது என்பதனை, ஒரு கம்யூனிஸ்டே தோலிரித்து காட்டியிருக்கிறார். திரிபுரா மாநிலத்தில் மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த லோக்கல் நிர்வாகி ஒருவர், ‘பணக்கட்டுகளை மெத்தையில் போட்டு படுத்து பார்த்தேன். இது தமக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார்.  ஆமாம், பின்னர் சந்தோஷம் வராமல், வெறென்ன வரும்? காதல், காமம், கலவி, கற்பு, பாலியல் முதலியவற்றைப் பற்றியெல்லாம் கூட இவர்கள் அலாதியான சித்தாந்தங்களை வைத்துள்ளனர். அவற்றை நான் ஏற்கெனவே, கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி, கற்பு, பாலியல், இத்யாதிI மற்றும் – II என்ற கட்டுரைகளில்[1] விளக்கியுள்ளேன்[2].

Currency Bed CPM way

கழிவறைகட்டி ரூ 2.5 கோடி சம்பாதித்த மார்க்ஸ்சிஸ்ட் சிந்தாந்தி: இந்த அளவிற்கு பணம் எப்படி வந்தது என்பது குறித்து கட்சி மட்டத்தில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சி கட்டிட பணிகளை இவர் காண்டிராக்ட் அடிப்படையில் எடுத்து செய்து கொடுத்து வருகிறார். சமீபத்தில் அகர்தாலா மாநகராட்சிக்குட்பட்ட 3 வார்டுகளில் கழிவறை கட்டுவதற்கான ஒப்பந்தம் பெற்றார். அகர்தாலா அருகே உள்ள ஜோஜேந்திர நகர் கமிட்டி உறுப்பினர் சமார் ஆச்சார்ஜி (42). அகர்தலா நகராட்சி கவுன்சில் பகுதிகளில் 2400 மலிவு விலை கழிப்பறை கட்டி கொடுத்தேன். இதன் மூலம் சுமார் 2 . 5 கோடி வருமானம் கிடைத்தது. கக்கூஸ் கட்டுவதிலே, இப்படி கோடிகளை அள்ளியுள்ளார் என்றால், மற்றவற்றைக் கட்டுவதில் எவ்வளவு கோடிகளை மற்ற கம்யூனிஸ்டுகள் அள்ளியிருப்பர்? தமிழகத்தில் கோடானு-கோடீஸ்வரர்களான நல்லக்கண்ணு போன்றோர் இத்தகைய வேடங்களைத்தான் போட்டு வருகின்றனர்.

Comrade Nallakkannu CPI

மற்றவர்கள் போல் நாமும் இருக்ககூடாது  –  என்று  ஜல்சாவில்  இறங்கிய கம்யூனிஸ்ட் வேதாந்தி: வங்கியில் இருந்து ரூ. 20 லட்சம் எடுத்தேன். வீட்டுக்கு கொண்டு சென்று படுக்கையறையில் போட்டு அதன் மீது படுத்து உறங்கினேன். இதன் மூலம் எனது கனவை நிறைவேற்றி கொண்டேன்[3]. இவ்வளவு பணத்தை வைத்து இவர் என்ன செய்ய போகிறார் என்று சிலர் கூறக்கேட்டேன். எனவே மற்றவர்கள் போல் நாமும் இருக்க கூடாது என்பதற்காக நான் இதனை செய்தேன் என்றார்.  இந்த மாநிலத்தில் மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது. இவரது பேச்சு குறித்து இந்த பகுதியின் செயலர் சமார் சக்ரோபோர்ட்டி கூறுகையில், இது எங்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  இதிலென்ன பெரிய அதிர்ச்சி இருக்கிறது, முன்னர் “கற்பழிப்பது டீ குடிப்பது போன்று” என்று நாயனார் சொன்னாரே, அதைவிடவா இது அதிர்ச்சியான விசயம்?

Communist manifesto on raping

கம்யூனிஸ்ட்  தலைவர்களில்  பலர்  பலகோடி  சொத்து  வைத்துள்ளனர்.   ஆனால்  வெளியில்  எளிமையானவர்  போல  வேஷம்  போடுவார்கள்: வியாழக்கிழமை 17-10-2013 மணி 6.30 மணியளவில் தொலைக்காட்சியில்  பணத்தில் உறங்கியதாக ஆச்சார்ஜி அளித்த பேட்டி லோக்கல் சேனலில் ஒளிபரப்பானது[4]. அந்த வீடியோ பட காட்சியில் ஒரு படுக்கையில் பணத்தை தூவி அதன் மீது சமர் ஆச்சார்ஜி படுத்து தூங்குவது போன்ற காட்சியும் இடம் பெற்றிருந்தது[5]. அவர் மேலும் கூறுகையில், ‘‘கம்யூனிஸ்ட் தலைவர்களில் பலர் பல கோடி சொத்து வைத்துள்ளனர். ஆனால் வெளியில் எளிமையானவர் போல வேஷம் போடுவார்கள்[6]. நான் அப்படி வாழ விரும்பவில்லை’’ என்றும் தெரிவித்தார்[7]. சமரின் இந்த கருத்து திரிபுரா மாநில கம்யூனிஸ்டு தலைவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆளும் கம்யூனிஸ்டு கட்சிக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது[8]. இதற்கு திரிபுரா மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.  இந்த காட்சியை பார்த்த காங்., கட்சியினர் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆளும் மார்க்., கம்யூ., கட்சியை சேர்ந்த பலர் இவ்வாறு பணம் குவித்து வைத்துள்ளனர். நாங்கள் ஏற்கனவே சொல்லி வந்தது இப்போது நிரூபணமாகியுள்ளது. இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

E K Nayanar who said raping is like drinking tea

 “கற்பழிப்பது டீ குடிப்பது போன்றது: முன்பு இ.கே.நாயனார் என்ற கேரள முதலமைச்சர், “கற்பழிப்பது என்பது டீ குடிப்பது போல”, என்று சொல்லிவிட்டார். உடனே பெண்கள் அமைப்புகளுக்கு பொத்துக் கொண்டு வந்துவிட்டது, “அதெப்படி முதலமைச்சர் ஒருவர் இவ்வளவு கேவலமாப் பேசலாம்”, என்று கேட்டபோது, “அப்படி என்று நானா சொன்னேன்? கம்யூனிஸ்ட் மேனிஃப்ஸ்டோவேக் (கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை) குறியிருக்கிறதே?”, என்று மறுவினையில் பதில் விளக்கமும் அளித்தார்[9]. பிறகு தனது நிலையை சிறிது மாற்றிக் கொண்டு விளக்கம் அளித்தாராம்! சில பெண் அமைப்புகளும் எதிர்த்தனர், ஆனால் பிறகு மறந்து விட்டனர். கம்யூனிஸ காம்ரேடுகள் என்ன இப்படி சொல்லிவிட்டாரே என்று பதறி மௌனிகளாக இருக்கும்போது, விஷயம் தெரிந்த காம்ரேடு-பண்டிதர்களோ உள்ளுக்குள் சந்தோஷமாக நினைத்து-நினைத்துச் சிரித்துக் கொண்டிருந்தனராம். Communist Red Parivarஅதாவது மேலே சுருக்கமாக ஏன் பொது சொத்து வேண்டும், தனியார் சொத்துக் கூடாதென்றால், குடும்பம் கூடாது என்று விளக்கப்பட்டதோ, அந்த அடிப்படையில், கம்யூனில் வாழும் பெண்களிடத்தே கற்ப்பை எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு வாரமும் கூடும்போது, அதே ஆண், அதே பெண் கூடுவதை அனுமதிக்கப்பட்டதா இல்லையா என்று நேரிடையான குறிப்புகள் இல்லை, ஆகவே கம்யூனிஸத்தில் கலவியல் என்பது கற்பிற்குட்பட்டதில்லை.

Communist Red Parivar Sex

லெனின் கற்பழிப்பைப் பற்றி சொன்னது என்ன? அலெக்ஸான்டிரா கொல்லோந்தை என்ற அழகான பெண்மணி, அக்டோபர் புரட்சிற்குப் பிறகு ருஷ்யாவில் மிகவும் பிரபலமானவர் ஆவார். அவர் “சுதந்திர காதல்” (free love) என்ற தத்துவத்தைப் பரப்புபவர், அதாவது யார் வேண்டுமானால், யாருடனும் உடலுறவு வைத்துக் கொள்ளலாம் (கற்ப்பைப் பற்றி கவலைப் படவேண்டாம்). லெனினுடன் வாதிடும்போது அவள் சொன்னாள், “கிளாசிலிருந்து தண்ணீரைக் குடிக்கும் மாதிரி காதல் / கலவி சுதந்திரமாக இருக்கவேண்டும்”. லெனின் சொன்னதாவது, “ஆனால் அழுக்கான கிளாசிலிருந்து யார் தண்ணீர் குடிப்பது?”, என்று வினா எழுப்பினாராம்! ஆகவே பெண் சொல்வது சுதந்திரமான கலவி பற்றி, ஆனால், ஆண்மகனோ சுத்தத்தைப் பற்றிதான் கவலைப் படுகிறான். அதாவது, அத்தகைய சுதந்திர-பொதுவுடமைக் கலவியிலும் “தனக்கு என்று வரும்போது சுத்தமானது வேண்டும்”, என்றநிலையில் தான் ஆண்மகன் இருக்கிறான். அந்நிலையில் கிளாஸ், தண்ணீர், தண்ணிரைக் குடிப்பது என்ற உருவகங்கள் எல்லாம் மறைந்து விடுகின்றன, ஆனால் குடிப்பதற்குள்ள ஆசையை மறைப்பதில்லை! பிறகு, கிளாரா ஜெட்கின் என்ற பெண்மணி, லெனின் “சுதந்திர காதல், மார்க்ஸியம் அல்லாதது, சமூகவிரோதமானது”, என்று சொன்னதாகக் கூறுகிறாராம்[10]. ஆனால் அவரே லெனின் ஹேம்பர்கின் விபச்சாரிகள் ஒரு சிறப்பான புரட்சி படைப் பிரிவினராக அமைக்கவேண்டும்[11]என்றபோது அது “மிகவும் மோசமானது, கீழ்தரமானது” என்று சொன்னதாகக் குறிப்பிடுகிறார்! அதாவது விபச்சாரிகள் புரட்சிகர பெண்மணிகளாக / வீராங்களைகளாக உலாவர லெனின் விரும்பவில்லை[12] போலும்!

© வேதபிரகாஷ்

19-10-2013


[6] “I have withdrawn Rs 20 lakh from my bank account to cherish the dream of sleeping on a bed full of money. I did it because I am not a hypocrite like other comrades who try to portray themselves as proletariat in spite of having huge property,” Acharjee was heard saying in the footage.

http://timesofindia.indiatimes.com/india/Tripura-CPM-leader-sleeps-on-bundles-of-cash-party-in-a-spot/articleshow/24354274.cms?

[9] In an interview to “The Week” (March 25, 1990), he told: “And you newspapermen make all sorts of noise over my remarks on rape. It was Lenin who said that in bourgeois society rape is like drinking water. The Communist Manifesto itself has mentioned that the capitalist will rape another capitalist’s wife. That is their morality. If Lenin could say, could I not repeat it? ………….”.

[10] Zetkin, Clara, 1934, Lenin on the Woman Question, New York: International , p.7. Published in Reminiscences of Lenin.

[12] ஜனநாயக மாதர் சங்க பெண்மணிகள் எல்லாம் பெண்கள் உரிமைப் பற்றி அதிகமாகவே பேசி வருகின்றனர். ஆனால், இதைப் பற்றியெல்லாம் ஏன் விவாதிப்பதில்லை என்று தெரியவில்லை

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக